சிலை வணக்கத்தால் சீரழியும் நாடு: இந்து மதத்தைத் தழுவிய கிரேக்க மாதின் எடுத்துக்காட்டு
இந்து மதத்தைத் தழுவிச் சாவித்திரி தேவி என்று மாற்றுப் பெயர் வைத்துக்கொண்ட கிரேக்க மாது , இந்துக்களுக்கு எச்சரிக்கை என்று தலைப்பிட்டு எழுதியுள்ள புத்தகத்தில் அபாய அறிகுறி என்ற அத்தியாயத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களாவன : ஆரியச் சிலை வணக்கத்துறையின் இறுதிக்கோட்டை - இந்த இந்தியா . ஆனால் , இந்த இந்தியாவில் இந்த இந்துத்வம் இனியும் எத்தனைக் காலம் உயிர்பற்றி நிற்கப் போகிறதோ ! கோயில்கள் நிறைந்த தென்னாட்டிலேயே இந்தக் கேள்வி வியப்பளிக்கலாம் . கோயில்கள் இருக்கும்வரை இந்துமதம் இருக்குமென்பது அவர்களுடைய எண்ணம் . ஆனால் , ஆரிய கலாச்சாரத்தின் தாயகமான வங்காளத்திலும் இந்து மதச் செல்வாக்கு பெரும் அளவுக்கு கரைந்துவிட்டது . மேற்கு பஞ்சாபில் ஓரளவுக்கு சீக்கியர்கள் இருந்தாலும் முஸ்லிம் மதத்தினர்கள் அதிகம் . வங்காளத்திலோ ஒரு இந்துவைக்கூட கண்ணில் காணாது பலகாத தூரம் பிரயாணம் செய்யலாம் . ( ஒரு சில பண லேவாதேவிக்காரர்களும் வியாபாரிகளும் தவிர்த்து மற்றெல்லோரும் முஸ்லிம்களே . கிழக்கு வங்கத்தில் மிகவும் அதிகம் ) பார்...