அய்யப்பன் கதை


பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்என்றான். அதற்கு பத்மாசூரன், ‘நான் யார் தலையில் வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும்என்றானாம்.

சிவனும், ‘அவ்வளவுதானே! அளித்தேன் போ!’ என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா? என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங்களுக்கும் ஓடினான். பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணுவிடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.

அதற்கு விஷ்ணுவானவன், ‘அதுதானா பிரமாதம், இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன்என்று கூறி, அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்துப் பத்மாசூரன் முன் சென்று நின்றான்.

அந்த மோகினிப் பெண்ணைக் கண்ட அசுரன், அவளைக் கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள், ‘நான் உனக்கு உடன்படுகின்றேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கிறாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டு வாஎன்று கூறினான்.

அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும்போது, தம் தலையில் கை வைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான்அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான்.

விஷ்ணு சிவனிடம் சென்று, ‘பயத்தை விடுத்து வெளியே வாருங்கள்! நான் அவனைப் பெண் வேடம் எடுத்துக் கொன்றுவிட்டு வந்துவிட்டேன்என்று கூறினான்.

அதற்கு சிவன், ‘எப்படிப் பெண் வேடம் போட்டுச் சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்என்றான். விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக் காட்டினான். அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான். ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டே ஓட, இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட, இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது. அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.

இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்பதுண்டு.

எனவே, இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும், நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம் கூட வெட்கப்பட வேண்டியதாம். இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன். இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.

நூல் : இந்துமதப் பண்டிகைகள் 
ஆசிரியர் : தந்தை பெரியார்


Comments

Popular posts from this blog

‘சொர்க்கவாசல்’ மகிமை

கந்த சஷ்டி